» வானம் கருத்திருக்கு

தந்தநானே தானநன்னே
தந்தநானே தானநன்னே
தந்தானே தானநன்னே
தானநன்னே தந்தநானே

வானம் கருத்திருக்கு
வட்டநிலா வாடிருக்கு
எட்டருந்து பாடுறேனே
எங்கப்பா எங்கபோன?

சிங்க தெருவெல்லாம்
சிந்தி அழுகிறேனே
சிங்கார சிங்கபூர
கண்ணீரில் கழுவுறேனே

வட்டிகடன் வாங்கி
வாக்கப்பட்டு போறவள
வாசலோடு நிக்கவச்சி
வந்துநானும் சேர்ந்தேய்யா

வட்டிகடன் கட்டி
வண்டியில சாமான்வாங்கி
வந்தவக வாயடக்க
வரிசை கொடுத்தேன்ய்யா

பக்கவாதம் வந்து
பாலகனா போனவரே
தொண்டைகுழி விக்கி
தொலைதூரம் போனதேனோ?

போனமகன் வரலயான்னு
பொறுக்கலையா உன்னுசுரு
புள்ளகொல்லி விழாம
போனதய்யா உன்னுசுரு.